Wednesday 3 July 2013

இடுபணி- ஆசிரியர் கல்வி கழகம்



Text Box: முன்னுரை1)
லக்கை தொட்டது இலக்கியம் எனப்படுகிறது. இலக்கு + இயம் = இலக்கியம் ஆகும். அதாவது இலக்கு - நோக்கம், கொள்கை, குறிக்கோள், இலட்சியம் எனும் மொழிக் கருத்துக்களையும் இயம் -  இயம்புவது, கூறுவது, வெளிப்படுத்துவது எனும் மொழிக் கருத்துக்களையும் குறித்து நிற்கின்றன. அறிந்த கருத்துக்களையும் உணர்ந்த உணர்ச்சிகளையும் பிறருக்கு எடுத்துக்கூற உதவுகின்ற ஒரு கருவி மொழியாகும். அம்மொழியைப் பேசுகின்ற மக்களது கொள்கைகளையும் குறிக்கோள்களையும் எடுத்தியம்புவது இலக்கியமாகும். எனவே இலக்கியத்தை ஒரு சமுதாயத்தின் போக்கு, ஒரு சமுதாயத்தின் இலக்கு, ஒரு சமுதாயத்தின் இலட்சியம், ஒரு சமுதாயத்தின் நிலைக்கண்ணாடி என்றெல்லாம் குறிப்பிட முடியும்.. ஒரு படைப்பாளி தான் உணர்ந்த ஒரு உணர்வை, எண்ணத்தை இலக்காக வைத்து அதை வெளிப்படுத்த எழுதுகிறான். அப்படி அந்த முயற்சியில் அவன் வெற்றால்  அது இலக்கியமாகிறது. இலக்கியம் எனக் குறிப்பிட்டால் சங்ககால எட்டுத் தொகைகளையும் பத்துப் பாட்டையும், வள்ளுவரின் திருக்குறளையும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும், ஒளவையாரின் நீதி நூல்களையும் இலக்கியமாகக் கொள்ளலாம்.
ஒரு சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளை அவர்களின் போக்கை, இலக்கை, இலட்சியங்களை  இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அக்காலம் முதல் (சங்ககாலம் முதல்) இக்காலம் வரை இலக்கியமானது மக்களின் வாழ்க்கை முறைகளையும் அதன் வளர்ச்சிக் கட்டங்களையும் பிரதிபலிப்பனவாகவே இருந்து வந்துள்ளதை நாம் நன்கு காண முடிகிறது.
சங்ககால சமுதாயமானது காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த ஒரு சமுதாயமாக விளங்கியதனாலேயே இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களும் காதலையும் வீரத்தையும் பிரதிபலிக்கும் இலக்கியங்களாக தோன்றின. பாட்டும் தொகையும் இக்கால மக்களின் வாழ்வியலைப் புலப்படுத்தும் சீரிய இலக்கிய நூல்களாகும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு கலித்தொகை, அகநானூறு ஆகிய தொகை நூல்கள் காதலையும் பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய தொகை நூல்கள் வீரத்தையும் பாடின. அவ்வாறே ஆற்றுப்படை நூல்களும், மதுரைக் காஞ்சியும் மன்னர்களின் கொடைத் தன்மையினையும் வீரத்தையும் பாட முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியன காதலைப் பாடின. இவ்வாறு சங்ககால மக்களின் அக வாழ்வையும், புறவாழ்வையும் அக்காலத்திலே தோன்றிய இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. அவ்வாறே இதனையடுத்து வருகின்ற காலகட்டத்தை நோக்கின் அங்குஅறம்முன்னிலை வகிப்பதை உணர முடியும்.
      சங்ககாலம் எவ்வாறு காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த காலமாக விளங்கியதோ அவ்வாறே இதனையடுத்து வருகின்ற சங்கமருவிய காலம்அறம்என்ற கருத்து நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமாகத் திகழ்கிறது. எனவேதான் இக்காலத்தில் திருக்குறள், நாலடியார், நான்மணிக் கடிகை, பழமொழி நானூறு, ஆசாரக் கோவை முதலான அற இலக்கியங்கள் அதிகமதிகம் தோற்றம் பெற்றன. இக்காலகட்டத்தையடுத்து வருகின்ற பல்லவர் காலம்பக்திஎன்ற கருத்து நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமாக விளங்கியதால் இக்காலம் முழுதும் பக்தி பேசப்படவும் பக்தி இலக்கியங்கள் தோன்றவும் காரணமாக அமைந்தன.






Text Box: இலக்கியம் தொடர்பாக அறிஞர்களின் கருத்துகள்2)
றிந்த கருத்துக்களையும் உணர்ந்த உணர்ச்சிகளையும் பிறருக்கு எடுத்துக்கூற உதவுகின்ற ஒரு கருவி மொழியாகும். அம்மொழியைப் பேசுகின்ற மக்களது கொள்கைகளையும் குறிக்கோள்களையும் எடுத்தியம்புவது இலக்கியமாகும். இவற்றினை வைத்து நோக்கும்போது, ‘இலக்கியம்என்பது ஒருகாலத்தின், ஒரு சமுதாயத்தின்நிலைக்கண்ணாடிஎன்ற உண்மை புரியவரும். இதனாலேயேஇலக்கியம் வாழ்க்கையின் எதிரொலிகள், சமுதாயத்தின் வளர்ச்சியைக் காட்டும் மைல் கற்கள், மனித இலட்சியத்தின் உயிர்நாடிஎன்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.
பண்டைக்காலத்திலோ தமிழறிஞர்கள்இலக்கியம்என்ற சொல்லை அதன் கருத்து நிலையில் பயன்படுத்தவில்லை. கவிதையே இலக்கியமாக கருதப்பட்ட காலமது. பாட்டு, பா, செய்யுள், யாப்பு, தூக்கு என்பன தொல்காப்பியத்தில் இலக்கியத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்களாகும். செய்யுள்களைத் தன்னகத்தே கொண்ட இலக்கிய வடிவத்தை நூல், பனுவல் எனும் சொற்களால் குறிப்பிட்டனர். அக்காலத்தில் இயற்றப்பட்டஈரடி இருநூறுஎன்னும் நீதிநூல் இலக்கியம் பற்றி, ‘இலக்கியம் என்ப இயலழகு நீதி இலக்காக இன்பந் தரின்எனக் குறிப்பிடுகிறது. இதற்கு உரையெழதிய இளவழகளார், ‘நூல்களால் கூறப்படும் உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம் என்பவற்றை இலக்காகக் கொண்டு எதையும் மெய்ப்பாடு என்னும் சுவையின்பம் பயக்கக் கூறுவது இலக்கியம் என விளக்குகிறார்.
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.
பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.
மு.வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.
    • பழங்காலம்
சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
  • இடைக்காலம்
    • பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
    • காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
    • உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
    • புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
    • புராணங்கள், தலபுராணங்கள்
    • இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
  • இக்காலம்
    • பத்தொன்பதாம் நூற்றாண்டு
      • கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
      • புதினம்
    • இருபதாம் நூற்றாண்டு
      • கட்டுரை
      • சிறுகதை
      • புதுக்கவிதை
      • ஆராய்ச்சிக் கட்டுரை
நமது முன்னோர்கள் பெரும்பாலும் இலக்கியங்களைப் பாட்டுக்களாக எழுதியவந்ததற்கு மக்கள் மனதைக்கவரும் வாசகங்களிலே இலக்கியங்கள் அமையவேண்டும் என்பதும் ஒரு காரணமாகும். செய்யுளிலே இனிய ஓசை உண்டு; பண்ணொடு பாடலாம். செம்பாகமான செய்யுட்கள் படிக்கும் போதே அல்லது பாடும்போதே அல்லது பிறர் பாடுவதைக் கேட்கும்போதே நம் உள்ளத்தில் ஒட்டிக் கொள்ளும். முன்னோர்களின் உரைநடையில் கூடச் செய்யுள் வாடை வீசுவதைக் காணலாம். ஆதலால் இலக்கியத்திற்கு அதன் எழுத்து அமைப்பு - வசன அமைப்பு இனியநடை இன்றியமையாததது என்பதில் ஐயமில்லை.
இலக்கியம் என்ற சொல் எப்படிச் சிறப்புப் பொருள் கொண்டு வழங்குகின்றதோ அதுபோலவே நூல் என்ற சொல் பண்டைக்காலத்தில் சிறப்புப் பொருள் கொண்டு வழங்கி வந்திருக்கின்றது. இலக்கியம் என்ற சொல் முன்பு பொதுச் சொல்லாக வழங்கி வந்தது. இன்று சிறப்புச் சொல்லாக வழங்கி வருகின்றது. நூல் என்ற சொல்லே முன்பு சிறப்புச் சொல்லாக அதாவது இன்று இலக்கியம் என்ற சொல் எப்பொருளைக் குறிக்கின்றதோ அப்பொருளைக் குறிக்கும் சொல்லாக வழங்கி வந்தது; இன்று பொதுச்சொல்லாக புத்தகம் என்பதைக் குறிக்கும் பொதுச்சொல்லாக வழங்கி வருகின்றது.
முன்னோர்கள் இலக்கியத்தை நூல் என்ற பெயரால் அழைத்திருக்கின்றனர். நூல் என்றால் பல சிறந்த கருத்துக்கள் நிறைந்தவை; சுவையுள்ள கற்பனைகள் நிரம்பியவை; உள்ளத்தைக்கவரும் இனிய செய்யுட்களின் தொகுப்பு; என்று கூறிவிடலாம். பண்டைக் காலத்தில் நூல் என்பது இந்தப் பொருளில் வழங்கிற்று என்று கூறுவது பொருந்தும். அறம் பொருள் இன்பங்களைக் கூறுவதே செய்யுள். இச்செய்யுட்களின் தொகுதியே நூல் என்று முன்னோர்கள் கூறினர்; கருதினர். "செய்யுட்கள் அறம், பொருள், இன்பம் முதலிய மூன்று பொருள்களையும் அமைத்துப் பாடுவதற்கு உரியவை" என்று தொல்காப்பியர் கூறியிருக்கின்றார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அறம், பொருள், இன்பம், என்ற இந்த மூன்று தலைப்பின் கீழ்மனித வாழ்வைப் பற்றிய எல்லா விஷயங்களையும், மனித வாழ்விற்குத் தேவையான எல்லா விஷயங்களையும் விரிவாகக் கூறிவிட முடியும். ஆதலால்தான் அறம், பொருள், இன்பங்களைப் பற்றிக் கூறுவதே செய்யுள் என்று கூறினர்; அச்செய்யுட்களின் தொகுப்பே இலக்கியம் - நூல் என்று கொண்டனர். பிழையில்லாமல், இலக்கண வழுவில்லாமல் எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்பது இலக்கண நூலார் கொள்கை.பொதுவாக, எழுதப்பட்டிருப்பன அனைத்தும் இலக்கியங்கள்தாம். ''லிக்'' என்ற வடமொழியடியாகப் பிறந்த சொல்லே இலக்கியம் என்பது. எழுதப்பட்டிருப்பது என்பதே இதன் பொருள்.எழுத்துருவிலே உள்ள அனைத்தும் இலக்கியம் என்பதே ஒரு பொதுவான கருத்து.
இதனடிப்படையில் நோக்கும்போது இலக்கியம் என்பது மனித வாழ்வினைப் பொருளாகக் கொண்டு படிப்பவரின் சிந்தனைக்கும் உணர்வுக்கும் விருந்தாக அமைவது. மனித மொழியால் ஆக்கப்படுவது. ஒரு வடிவத்தை உடையது. கற்பவருடைய உள்ளத்தில் எழுச்சியையும் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் உள்ளது. மகிழ்விப்பதோடு அறிவுறுத்துவதாகவும் அமைவது என்ற முடிவுக்கு வரலாம்.
பண்டைய காலங்களில் இலக்கியமானது செய்யுள் வடிவிலேயே பயிலப்பட்டு வந்தது. செய்யுள் வடிவத்திலிருந்த இலக்கிய வடிவம் புதியதொரு பரிணாமத்தைப் பெற்றது. சங்கமருவிய காலத்திலேயேயாகும். சங்கமருவிய காலத்திலே தோன்றியதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தின் சில பகுதிகள் உரைநடை வடிவத்திலே அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்என வழங்கப்படுகிறது.
சங்கமருவிய காலத்திலே தோன்றிய உரைநடை இலக்கிய வடிவமானது பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் பலவித வளர்ச்சிப் படிகளைத் தாண்டி இருபதாம் நூற்றாண்டிலும் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலும் உச்ச நிலையை அடைந்து செய்யுள் இலக்கியம் என்ற ஒன்று தற்போது எங்கே இருக்கின்றது எனக் கேட்குமளவுக்கு வெற்றிப் படிகளை எட்டியிருப்பது அதன் சாதனை என்றே கூறவேண்டும்.
ஐரோப்பியர் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான சிறுகதை, நாவல் என்ற உரைநடை இலக்கிய வடிவமும் இதற்கு ஒரு காரணம் என்றே குறிப்பிட வேண்டும். இதன் அடுத்த கட்டமாகவே யாப்பமைதி பேணி வந்த கவிதை வடிவமும் வசன கவிதையாகவும் புதுக்கவிதை என்ற பெயரில் உரைநடைக் கவிதையாகவும் வரத் தலைப்பட்டது. இவ்வாறு பண்டைய இலக்கிய வடிவமான செய்யுள் வடிவம் காலப் போக்கில் மறைந்து உரைநடை இலக்கிய வடிவமாக இன்று நம்முன் பரிணமிக்கிறது.
காலத்துக்குக் காலம் இலக்கிய வடிவங்கள் மாறலாம். ஆனால்இலக்கியம்என்ற கருத்து நிலையில் அதன் பொருள் நிலையில் எத்தகைய மாற்றமும் வரக் கூடாது அது செய்யுள் வடிவமாக இருந்தாலும் சரி, உரைநடை வடிவமாக இருந்தாலும் சரி, சினிமா இலக்கியமாக இருந்தாலும் சரி, ‘இலக்கியம்என்ற கருத்து நிலையில் இவையாவும் ஒன்றே. ‘இலக்கியம்என்றால் என்ன என்பதற்கு மேலைத்தேய அறிஞர்கள் கூட சில வரைவிலக்கணங்களை முன் வைத்துள்ளனர். இவையாவும் இலக்கியத்தின் பொருள் நிலையை எந்தளவுக்கு புலப்படுத்துகின்றன என்பதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது.







Text Box: தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் காணப்படும் இலக்கிய வகைகளும் மொழித்திறன்களும்.3)                                  
     
மிழ் தொடக்கப் பள்ளிப் பாடத்திட்டத்தில்  பன்னிரண்டு (12) இலக்கிய கூறுகள் போதிக்கப் படுகின்றன. மாணவர்களின்  தமிழ் மொழி  ஆற்றலை வளப்படுத்துவதற்கும்  இலக்கியத்தின் பால்  ஆர்வத்தை வளர்ப்பதற்கும் இலக்கியம்  போதிக்கப்படுகின்றது. இலக்கியத்தை  இலக்கியப் பாடமாக தனித்து  நடத்தாமல் கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து ஆகிய மொழித் திறன்களுடன்  ஒருங்கிணைத்துக்  கற்பிக்கப் படுகின்றது. இலக்கியத்தின் வழி மொழி நயம், பொருள் பொதிந்த கருத்துகள், மனித, சமுதாய, பண்பாட்டு  கூறுகள் போன்றவற்றை மாணவர்களுக்கு  உணர்த்த முடியும்.

தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் காணப்படும் இலக்கிய வகைகள்
********************************************************************************
1)
ஆத்தி சூடி
தமிழ் மொழியாற்றலை வளப்படுத்துவதற்கு ஆத்திச்சூடிப் போதிக்கப் படுகின்றது. தமிழ் நாட்டில் சிறப்புற விளங்கிய புலவர்களுள் ஒருவர் ஒளவையார். இவர் பல நீதி நூல்களை இயற்றியுள்ளார். ஆத்திச்சூடி எனும் நீதி நூலில் மொத்தம் 108 செய்யுள்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் 12 செய்யுள்கள் உயிர் எழுத்தில் தொடங்குகின்றன. மாணவர்கள் இச்செய்யுள்களை ஓதிப் புரிந்துக் கொள்கின்றனர்.



 
  
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

புதிய ஆத்திசூடி
இருபதாம் நூற்றாண்டின் தலையாயப்புலவர்களுள் மகாகவி பாரதியாரும் ஒருவர். இவர் சிறார்களுக்கு ஊக்கம் ஊட்டும் வண்ணம் புதிய ஆத்திச்சூடி பாடியுள்ளார். தொடக்கப்பள்ளி பாடத்தில் உள்ள 14 புதிய ஆத்திசூடி மாணவர்களுக்குப் புத்துணர்வு ஊட்டும் வகையில் உள்ளது. பாரதியார் கூறும் அறிவுரைகள் மாணவர்கள் மனதில் புதிய எழுச்சியை ஊட்டும்.
 
2)                                                                                                                                                                                                                                                                                                                                                                             

திருக்குறள்
திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப் பட்டது. மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 30 குறள்களை பயில்கின்றனர். குறள் 1, 2, 4, 26, 34, 35, 50, 80, 100, 102, 108, 127, 138, 151, 202, 236, 294, 391, 393, 396, 398, 400, 411, 423, 435, 467, 595, 616, 666, 788 ஆகிய குறள்களாகும்.  திருக்குறளின் சுவையையும் கருத்துகளையும் கற்கின்றனர்.



 
3)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

கொன்றை வேந்தன்
ஒளவையார் இயற்றிய செய்யுள்களில் கொன்றை வேந்தனும் அடங்கும். மாணவர்களுக்குத் தகுந்தபடி இதில் 12 செய்யுள்கள் உள்ளன. மாணவர்கள் 12 செய்யுள்களின் பண்பு நலத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்கின்றனர். கொன்றை வேந்தன் செய்யுள் வாயிலாக மாணவர்கள் சிறந்த கட்டொழுக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.



 
4)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 


 
உலக நீதி
உலக நீதி எனும் செய்யுள் உலகநாத பண்டிதர் இயற்றினார். மாணவர்களின் அறிவு செறிவுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளது. நல்ல பண்பு நெறிகளை ஊட்டும் இச்செய்யுள்கள் மாணவர்களின் உயர்வுக்குத் தேவையான சிறந்த கருத்துகளைக் கூறும் நூலாக அமைந்துள்ளது. மாணவர்கள் கற்றுணர்ந்து போற்ற  வேண்டுவது கடமையாகும்.



 
5)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 
வெற்றி வேற்கை
நறுந்தொகை எனும் நூலில் இடம் பெற்றது வெற்றி வேற்கையாகும். அதிவீரராம எனும் பாண்டிய மன்னரால் இயற்றப் பட்ட நூலாகும். வெற்றி வேற்கை செய்யுள்கள் உலக இயல்புகளை இயம்புவதாக அமைந்துள்ளது. மாணவர்கள் 9 செய்யுள்களை கற்கின்றனர். மிகவும் ஆழமான கருத்துகளையும் விரிவான விளக்கங்களையும் கொண்ட செய்யுள்களாக இவை போதனையில் இடம் பெற்றுள்ளன.



 
6)                                                                                                                                                                                                                                                                                                                                                                             



 
மூதுரை
மூதுரை ஒளவையாரால் பாடப்பட்டது. இதில் காணும் செய்யுள்கள் எளிமையும் இனிமையும் உடையவை. பழைய தமிழ் இலக்கிய கருத்துகள் மூதுரையில் காணப்படுகிறது. தமிழ்ப்பள்ளிப் பாடத்திட்டத்தில் 2 மூதுரைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. இரண்டு செய்யுள்களிலும் உயர்ந்த கருத்துகள் மறைப் பொருளாக உள்ளன. மாணவர்களுக்கு ஏற்புடையதாக உள்ளன.



 
7)                                                                                                                                                                                                                                                                                                                                                                             
நீதி நெறி விளக்கம்
இச்செய்யுள் குமரகுருபர சுவாமிகள் இயற்றிய செய்யுளாகும். மாணவர்கள் 1 செய்யுள் மட்டும் கற்கின்றனர்.



 
நல்வழி
ஒளவையார் இயற்றிய செய்யுளாகும். மாணவர்கள் 1 செய்யுள் மட்டும் கற்கின்றனர்.



 
8)                                                                                                                                                                                                                                                                                                 
நாலடியார்
மாணவர்கள் 1 செய்யுளை மட்டும் கற்கின்றனர். மிகவும் ஆழ்ந்த கருத்தைக் கொண்ட செய்யுளாகும்.



 
9)                                                                                                                         

10)
நன்னெறி
இச்செய்யுள் சிவபிரகாச சுவாமிகளால் இயற்றப் பட்டதாகும். மாணவர்கள் 1 செய்யுளை மட்டும் கற்கின்றனர்.



 
                                                                                                       

11)                                                    
பல்வகைச் செய்யுள்கள்
மாணவர்கள் 3 செய்யுள்களைக் கற்கின்றனர். ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டவையாகும்.



 
                           
12)

தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் காணப்படும்
இலக்கிய மொழித் திறன்கள்

ஆண்டு
திறன்
கற்றல் பேறு
இலக்கிய
வகை
ஆண்டு 1
1.17








2.11
சந்தப்பாடல், கவிதை, செய்யுள் ஆகியவற்றை ஒப்பிவித்து மகிழ்வர்.
படிநிலை 1. எளிமையான சந்தப் பாடலைப்
           பாடுவர்.
படிநிலை 2. சந்தப்பாடல், செய்யுள்
           ஆகியவற்றை ஓதுவர்; பாடுவர்.
படிநிலை 3. சந்தப்பாடல், செய்யுள்
           ஆகியவற்றை மனனம் செய்து
           ஒப்புவிப்பர்.
சந்தப்பாடல், கவிதை, செய்யுள் ஆகியவற்றின் பொருள் அறிவர்.
படிநிலை 1. கொடுக்கப்பட்ட செய்யுளை
           வாசிப்பர்.
படிநிலை 2. கொடுக்கப்பட்ட செய்யுளைப்
           பொருளறிந்து வாசிப்பர்.
படிநிலை 3. கொடுக்கப்பட்ட செய்யுளுக்கு
           ஏற்ற பொருளை இணைந்து
           வாசிப்பர்.

சந்தப்பாடல்








ஆத்திச் சூடி
ஆண்டு 2
1.17










2.11

சந்தப்பாடல், கவிதை, செய்யுள் ஆகியவற்றை ஒப்பிவித்து மகிழ்வர்.
படிநிலை 1. எளிமையான சந்தப் பாடலைச்
           சரியான உச்சரிப்புடனும்
           அபிநயத்துடனும் பாடுவர்.
படிநிலை 2. செவிமடுத்த செய்யுள்களை
           ஒப்புவிப்பர்.
படிநிலை 3. சரியான உச்சரிப்பு, பாவனை
           ஆகியவற்றுடன் செய்யுளையும்
           சந்தப் பாடல்களையும்
           ஒப்புவித்து மகிழ்வர்.
கவிதை, பாடல், செய்யுள் ஆகியவற்றின் பொருள் அறிவர்.
படிநிலை 1. தேர்ந்தெடுத்த கவிதை, பாடல்,
           ஆகியவற்ரை வாசித்துப்
           பொருள் அறிவர்.
படிநிலை 2. புதிய ஆத்திசூடி, கொன்றை
           வேந்தன் ஆகியவற்றின்
           பொருளை விளக்கும் கதைகளை
           வாசித்துப் பொருள் அறிவர்.
படிநிலை 3. பல்வேறு மூலங்களிலிருந்து
           திரட்டப்பட்ட கவிதை, பாடல்,
           செய்யுள் ஆகியவற்றை வாசித்து
           மகிழ்வர்.







சந்தப் பாடல்
உலகநீதி
கொன்றை வேந்தன்.




புதிய ஆத்திச்சூடி

கொன்றை வேந்தன்
ஆண்டு 3



1.17











2.11
சந்தப்பாடல், கவிதை, செய்யுள் ஆகியவற்றை ஒப்பிவித்து மகிழ்வர்.
படிநிலை 1. செய்யுள், கவிதை, திருக்குறள்
           ஆகியவற்றை மனனம் செய்து
           ஒப்புவிப்பர்.
படிநிலை 2. செய்யுள், கவிதை, திருக்குறள்
           ஆகியவற்றைப் பொருள்
           உணர்ந்து மனனம் செய்து
           கூறுவர்.
படிநிலை 3. செய்யுள், கவிதை, திருக்குறள்
           ஆகியவற்றை மனனம் செய்து
           ஒப்புவித்து மகிழ்வர்.
கவிதை, பாடல், செய்யுள் ஆகியவற்றின் பொருள் அறிவர்.
படிநிலை 1. தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுளை
           வாசித்து மனனம் செய்வர்;
           ஒப்புவிப்பர்.
படிநிலை 2. செய்யுளை விளக்கும் கதைகளை
           வாசித்துப் பொருள் அறிவர்.
படிநிலை 3. கற்ற செய்யுள்களைப் பல்வேறு
           சூழலில் பயன்படுத்துவர்.



திருக்குறள்













திருக்குறள்
ஆண்டு 4
1.17












2.11
சந்தப்பாடல், கவிதை, செய்யுள் ஆகியவற்றை ஒப்பிவித்து மகிழ்வர்.
படிநிலை 1. கவிதை, பாடல், செய்யுள்
           ஆகியவற்றை நயத்துடன்
           பாடுவர் / ஒப்புவிப்பர்.
படிநிலை 2. கவிதை, பாடல், செய்யுள்
           ஆகியவற்றை பொருளறிந்து
           ஒப்புவிப்பர்.
படிநிலை 3. கவிதை, பாடல், செய்யுள்
           ஆகியவை உணர்த்தும்
           நன்னெறிப் பண்புகளை அறிந்து
           நயத்துடன் கூறுவர்.

கவிதை, பாடல், செய்யுள் ஆகியவற்றின் பொருள் அறிவர்.
படிநிலை 1. தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுளை
           வாசித்து மனனம் செய்வர்;
           ஒப்புவிப்பர்.
படிநிலை 2. பல்வேறு செய்யுளின் பொருள்
           விளக்கும் மூலங்களின் வழி
           பொருளறிதல்/ ஒப்புவிப்பர்.
படிநிலை 3. பல்வேறு செய்யுளின் பொருள்
           விளக்கும் மூலங்களின் வழி
           கருத்துரை அறிதல்;மனனம்
           செய்வர்;விளக்கம் கூறுவர்.

கவிதை
பாடல்
செய்யுள்











திருக்குறள்
மூதுரை
பல்வகை செய்யுள்.

ஆண்டு 5
1.17
















2.11



சந்தப்பாடல், கவிதை, செய்யுள் ஆகியவற்றை ஒப்பிவித்து மகிழ்வர்.
படிநிலை 1. கொடுக்கப்பட்ட
           செய்யுள்களையும்
           கவிதைகளையும் சரளமாகவும்
           தொனியோடும் ஒப்புவித்து
           மகிழ்வர்.
படிநிலை 2. கொடுக்கப்பட்ட
           செய்யுள்களையும்
           கவிதைகளையும் நெட்டுரு
           செய்து பொருள் விளங்க
           கூறுவர்.
படிநிலை 3. கொடுக்கப்பட்ட
           செய்யுள், கவிதை ஆகியவற்றுள்
           நன்னெறிப் பண்புகளை
           அடையாளங் கண்டு கொள்வர்.

கவிதை, பாடல், செய்யுள் ஆகியவற்றின் பொருள் அறிவர்.
படிநிலை 1. கற்ற கவிதை,பாடல்,செய்யுள்
          ஆகியவற்றைப் பொருளுணர்ந்து
          வாசிப்பர்.
படிநிலை 2. கற்ற கவிதை,பாடல்,செய்யுள்
          ஆகியவற்றின் பொருளுணர்ந்து
          நயத்துடன் வாசிப்பர்.
படிநிலை 3. கவிதை,பாடல்,செய்யுள்
          ஆகியவற்றைப் பொருளுணர்ந்து
          நயத்துடன் வாசித்து மகிழ்வர்.



திருக்குறள்
மூதுரை
பல்வகைச் செய்யுள்















கவிதை
பாடல்
ஆண்டு 6
1.17















2.11
சந்தப்பாடல், கவிதை, செய்யுள் ஆகியவற்றை ஒப்பிவித்து மகிழ்வர்.
படிநிலை 1. கொடுக்கப்பட்ட
           செய்யுள்களையும்
           கவிதைகளையும் சரளமாகவும்
           தொனியோடும் வாசித்து
           மகிழ்வர்.
படிநிலை 2. கொடுக்கப்பட்ட
           செய்யுள்களையும்
           கவிதைகளையும் நெட்டுரு
           செய்து ஒப்புவிப்பர்.
படிநிலை 3. கொடுக்கப்பட்ட
           செய்யுள், கவிதை ஆகியவற்றுள்
           நன்னெறிப் பண்புகளை
           அடையாளங் கண்டு கூறுவர்.

கவிதை, பாடல், செய்யுள் ஆகியவற்றின் பொருள் அறிவர்.
படிநிலை 1. கற்ற கவிதை,பாடல்,செய்யுள்
          ஆகியவற்றைப் பொருளுணர்ந்து
          வாசிப்பர்.
படிநிலை 2. கற்ற கவிதை,பாடல்,செய்யுள்
          ஆகியவற்றின் பொருளுணர்ந்து
          நயத்துடன் வாசிப்பர்.
படிநிலை 3. கவிதை,பாடல்,செய்யுள்
          ஆகியவற்றைப் பொருளுணர்ந்து
          நயத்துடன் வாசித்து நெட்டுரு
          செய்து கூறுவர்.


கவிதை
பாடல்















கொன்றை வேந்தன்





Text Box: சிறுவர் கதைகளைப் பற்றி தகவல்கள்.4)                            

வகை இலக்கியங்களுள் குழந்தை இலக்கியம் பழைமையான ஓர் இலக்கியமாகக் காணப்படுகின்றது. ஒரு மரம், செடியாக இருக்கும்போது, தினமும் நீர் ஊற்றி, மண்ணை கிளறிவிட்டு, உரம் இட்டு  ஆடுமாடுகள் கடித்துவிடாதவாறு வேலியிட்டு பாதுகாத்து அக்கறையுடன் வளுர்க்கிறோம். இவை எல்லாம் இல்லாவிட்டால் அந்த செடி ஓரளவு மரமாக வளரலாம். ஆனால் நல்ல பயன்தரும் மரமாக அது திகழ்வதில்லை. குழந்தைகளும் அப்படிப்பட்டவர்களே. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவளித்து, ஒழுக்கங்களைக் கற்பித்து நல்லறிவு பெறச் செய்யவேண்டும். இவற்றையெல்லாம் அக்கறையுடன் செய்யாவிட்டால் சிறுவர்கள் மனிதர்களாகலாம். ஆனால், நல்ல குடிமக்களாகவும் சான்றோர்களாகவும் திகழ முடியாது.

உலகில் குழந்தை இலக்கியங்கள் எங்கெல்லாம் செழுமையுடன் உள்ளதோ அங்கெல்லாம் சிறந்த சமூக உருவாக்கம் நிகழ்கின்றது என்பது கண்கூடு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. பாடதிட்டத்தினை தாண்டி ஏராளமான விடயங்களைக்  கற்றுக்கொள்ள இது உதவுகிறது. வளர்ந்து வரும் ஊடகத்தின் தாக்கம் ஏராளம். குழந்தைகள் உலகத்தை இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் மிகுதியாக அபகரித்துக்  கொண்டிருக்கிறது.

இன்று தொழிநுட்ப ரீதியில் உலகம் முன்னேறிவிட்ட நிலையில்கார்ட்டூன்மூலமான சித்திரங்களும், நாடகங்களும் குழந்தைகளின் மனதைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றன. கார்ட்டூன்கள் சிறார்களின் கற்பனை வளத்தை பெருக்குவதாக இருந்தாலும் வன்முறைக்கும்பல்கள் அதிகரித்துப் போனதற்கு பழைய அற்புத நேயமிக்க கதைச்சொல்லிகள் இல்லாமற் போனதே காரணம். பாட்டி சொல்வது அவள் கேட்ட கதையா  அல்லது அவளுடைய சொந்த சரக்கா என்று தெரியாது. அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வாக்காகத் தோன்றும். கதை சொல்லும் பாட்டிமார்களை நாம் இழந்துவிட்டது ஒரு பண்பாட்டு இழப்பு.
எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம்.   தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த நாட்டை விடவும் நம்  பண்பாட்டில் அதிகம்.

பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் தெனாலிராமன் கதை, பரமார்த்த குருகதை, விக்கிரமாதித்தன் கதை, சிபி சக்கரவர்த்தி கதை என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை.

குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றால் அதனை ஆணிவேராக இருந்து வளர்த்தெடுத்தவர் திரு. அழ.வள்ளியப்பா அவர்கள். பூவண்ணன், தூரன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோரும் சிறந்த குழந்தை எழுத்தாளர்கள். அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், அரும்பு போன்ற சிறுவர் இதழ்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.

சிறுவர் கதைகள்

முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை. 'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை. 'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை. 'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை. கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது. ஓநாயும் "நண்பா, நண்பா...இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை....." என்று வருத்தத்துடன் கூறியது.
"அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. "சேச்சே...அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்.
"அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று."உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை...அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
சிரவணன்  என்று  ஒரு  சிறுவன் இருந்தான். அவனது  தாயும்  தந்தையும்  மிகவும்  வயதானவர்கள்.அத்துடன்  இருவரும்  கண்  தெரியாதவர்கள்.தங்களின்  மகனின்  உதவியில்லாமல்  எந்த ஒரு  வேலை யையும்  செய்ய  இயலாதவர்கள்சிரவணனின்  தந்தையார்  ஒரு  ரிஷி. ஆகவே  அவர்கள்  ஒரு  வனத்தில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள்  தங்கியிருந்த  வனத்தில்  நீரின்றி  வறட்சி  ஏற்பட்டதுஆகவே  வேறு  வானத்தைத்  தேடிப்  புறப்பட்டனர்நடக்க இயலாமலும்  கண்  தெரியாமலும்  தவிக்கும்  தன்  பெற்றோருக்கு  ஊன்றுகோலாகவும்  கண்ணாகவும்  இருந்தான்  சிரவணன்இரண்டு  பெரிய  பிரம்புத் தட்டுகளில்  இருவரையும்  அமரவைத்து  அத்தட்டுகளைத்   தராசு  போல்  அமைத்து   அதைத்தன்  தோளில்  தூக்கிக்  கொண்டான்வாலிப  வயதை  நெருங்கியவன்  ஆனதால்  சிரவணன்  சிரமமின்றி  தன் பெற்றோரைச் சுமந்து சென்றான். வெகு தூரம்  நடந்து  வேறு ஒரு  காட்டுப்  பகுதியை  அடைந்தனர்சிரவணனின்  தயார்  நீர்  அருந்தக்  கொண்டுவருமாறு  கூறினார். தந்தையாரும்  தாகமாக  உள்ளது   எனக்கூறவே  இருவரின்  தாகத்தையும்  நீக்க  எண்ணினான்குடுவையில்  நீர்  காலியாக  இருந்ததால்  குளமோ  கிணறோ  அருகில்  உள்ளதா  எனத்  தேடிச்  சென்று  நீர்  கொண்டு  வருவதாகக்  கூறினான்  சிரவணன்..விரைவில்  வந்துவிடுமாறு  கூறி   அனுப்பிவைத்தனர்  அந்த  வயோதிகத்  தம்பதியர்.   அவர்களை  வணங்கி  விடை பெற்றுப் புறப்பட்டான் சிரவணன்.

அந்தப்  பகுதி  அயோத்தி  நகரைச்  சேர்ந்ததுஅயோத்தி  அரசன்  தசரதன்காட்டுவிலங்குகளின்  துன்பத்திலிருந்து  மக்களைக்  காப்பதற்காக  துஷ்ட    மிருகங்களை  வேட்டையாட  தசரதன்  கானகம்  வந்திருந்தான்மாலைநேரம்இருள்  லேசாகக்  கவிந்து  கொண்டிருந்ததுமரத்தடியில்  ஓய்வெடுத்துக்  கொண்டிருந்தான்   மன்னன்அவன்  அருகே  மிருகம்  ஒன்று  தண்ணீர்  குடிப்பதுபோல  சத்தம்  கேட்டது. மன்னன்  துள்ளி  எழுந்தான்.தன்  வில்லில்  நாணைத்  தொடுத்தான்வில்லிலிருந்து  அம்பு  புறப்பட்ட  மறுகணமே  "அம்மா!என்ற அலறல் குரல் கேட்டது.

மனிதக்  குரலைக்  கேட்ட  மறுகணம்   மன்னன்  திடுக்கிட்டான்குரல்  வந்த  திசை  நோக்கி  ஓடினான்அங்கே  சிரவணன்  அம்பு  பட்டு  வீழ்ந்து  கிடந்தான்அவனிடம்  தசரதன்  மன்னிக்குமாறு  வேண்டினான். தவறு  நேர்ந்துவிட்டது  என்று  புலம்பி அழுதான். அவனைத்  தடுத்த  சிரவணன்,
"
அரசேஎன்  பெற்றோர்  வனத்தில்  தாகத்தால்  தவித்தவாறு  உள்ளனர்அவர்களிடம்  நான்  இறந்த  செய்தியைச்  சொல்லாமல்  அவர்களை  நீர்  அருந்தச்  செய்துவிடுங்கள். பெற்ற  தாய்  தந்தையரின்  நீர்  வேட்கையைத்  தீர்க்காமல்  சாகிறேன்  .நீங்கள்  அவர்களின்  மகனாக  இருந்து  அவர்கள்  தாகத்தைத்  தீர்த்து  விடுங்கள்இதுதான்  என் கடைசி  ஆசை."என்று  கூறிவிட்டு  இறந்தான்

சிரவணன்  கூறியது  போல்  நீரை  எடுத்துக்கொண்டு  அவன்  பெற்றோர்    இருக்குமிடம்  நோக்கிச்  சென்றான்  தசரதன்குரலைக்  காட்டாமல்  நீரை  அந்த  வயோதிகத்  தாயிடம்  கொடுத்தான்தசரதனின்   கை  பட்டதுமே  "யார்  நீ?" என்று  சத்தமிட்டாள்  அந்தத்தாய்இருவரும்  "எங்கள்  மகன்  எங்கேநீ  ஏன்  வந்தாய்? எங்கள்  மகனுக்கு    என்னவாயிற்று?"  என்று  அழுது  புலம்பினர்அதைத்  தாங்காத  தசரதன்  தான்  தவறாக  அம்பெய்திய  காரணத்தால்  சிரவணன்  மாண்ட  செய்தியைக்  கூறினான்புத்திர  சோகம்  தாங்காத  அந்தப் பெற்றோர்  "! மன்னாநாங்கள்  மகனை  இழந்து  தவித்து  உயிர்  விடுவது  போலவே  நீயும்  எத்தனை  புத்திரர்களைப்  பெற்றாலும்  யாரும்  அருகே  இல்லாமல்  புத்திர  சோகத்தாலேயே உயிர்  விடுவாய்.   இது  எங்கள்  சாபம்  "  என்று சபித்துவிட்டு உயிர் விட்டனர்.

பின்னாளில்  இந்த  தசரதன்  ராமனை  வனவாசத்திற்கு  அனுப்பிவிட்டு  புத்திரசோகத்தில்  ஆழ்ந்து  துன்பப்பட்டான்பரதனும்  சத்ருக்னனும்   கேகயநாடு  செல்லவும்   ராம  இலக்குவர்  வனம்  ஏகவும்  தசரதன்  தனிமையில்  தவித்து  பின்  உயிர்  விட்டான்நல்லோர்  சொல்லுக்கு  வலிமை  உண்டு.பெற்றோரை  தெய்வமாக  எண்ணி  அவர்களுக்கு  அன்புடன்  சேவை  செய்து  வந்த  சிரவணன்  பண்பால் பெருமை  பெற்றான். அவன்  பெற்றோரின்  சாபம்  பலித்துவிட்டதுஎனவே   பெற்றோரிடம்  நாம்  ஆசிபெற   என்றும்  அவர்களை  வணங்க  வேண்டும்.





















Text Box: மொழிப்பாடத்தில் கதை எவ்வாறு மொழியாற்றலை / மொழித்திறனை  வளர்க்கிறது.5)                                                                          
      சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினால், அவர்களது மூளை வளர்ச்சியும் மொழி வளமும் மேம்படும் என்பது அனைவரும் அறிந்த நன்மைகள். முதலாவதாக குழந்தை தனக்கு வெளியேயுள்ள உலகோடு தொடர்பு கொள்வதற்கு மொழி உதவுகிறது. அந்த திறனில்லாத குழந்தை எக்காரியத்திலும் வெற்றி ஈட்ட முடியாது. இரண்டாவதாக குழந்தையின் அக வளர்ச்சிக்கும் மொழி முக்கியமானது. மொழியை உள்வாங்கிக்கொள்வதன் மூலம் குழந்தை சிந்திக்க தொடங்குகிறது. மொழி மூலம்தான் குழந்தை எண்ணக்கருக்களை பெற்றுக்கொள்கிறது.
ஆரம்ப நிலையில் கேட்டல், பேச்சு ஆகிய இரண்டு முறைகள் மூலமே மொழி வளர்ச்சி ஏற்படுகின்றது. கேட்டலால் பேச்சு வளர்கின்றது. பேச்சு மூலம் மூளையின் விவேகமும் வளர்கின்றது. பேச்சுத்திறன் பிள்ளையின் ஆளுமை வளர்ச்சியில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கேட்டலும் பேச்சும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். சொற்களஞ்சியம் கேட்டலாலயே வளர்கின்றது. மொழித்திறன் விருத்தி நன்கு கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் இவையாவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன.
இவ்வாறே குழந்தைகள் மொழிப்பாடத்தில் கதைகளைக் கேட்டு இன்புறுவதின் வழி மொழியாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர். ஆசிரியர் கூறும் கதைகளைக் கேட்டு; அதிலுள்ள கதாப்பாத்திரங்களின் வழி கூறப்படும் செய்திகளை உணர்ந்து கொள்கின்றனர். கதையின் மொழி நயத்தையும் மொழி நடையையும் அறிந்து கொள்கின்றனர். இதன் மூலம் மொழி ஆற்றலைப் பெற்று மொழித்திறனை வளர்த்துக் கொள்கின்றனர்.
கதையைக் கேட்டறியும் மாணவர்கள், அதனை எழுத்து வடிவில் எழுதி இன்புறும் போது மொழி நடையையும் கதையின் வாக்கிய அமைப்பு முறையையும் கற்றுக் கொள்கின்றனர். கதைகளின் வாக்கிய அமைப்பு முறை வேறுப்பட்டிருப்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்கின்றனர். மாணவர்கள் வாக்கிய அமைப்பு முறைகளை அறியும் போது சொல், சொற்றொடர் மற்றும் சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். இதன் மூலம் மொழித்திறனை வளர்த்துக் கொள்கின்றனர்.
மாணவர்கள் கதைகளைப் பாத்திரம் ஏற்று நடிக்கும் போது மொழியாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர். கதைகளின் பாத்திரங்களை நடித்து காட்டும் போது நாடக உத்திகளைக் கற்றுக் கொள்கின்றனர். பேச்சு, உச்சரிப்பு மற்றும் பாவனைகளைக் கற்றுக் கொள்கின்றனர். கதைகளைக் கற்றுக் கொள்வதன்  மூலம் மாணவர்கள் இயல்பாக மொழியாற்றலைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
மொழிப்பாடத்தில் அடிப்படை அறிவு நிலைகளான கேட்ட்ல், பேச்சு, வாசிப்பு எழுத்து ஆகியவை வளம் பெற கதைக் கூறுதல் இன்றியமையாததாக அமைகிறது. கதை வரும் நீதிகளை மாணவர்கள் உணரும் போது அறிவு நிலையில் மாற்றங்களைக் காண்கின்றனர். கதைகள் கற்பதன் வழி நினைவாற்றல் வளர்வதோடு ஒழுக்க நெறிகளையும் கற்றுக் கொள்கின்றனர். மாணவர்களின் அறிவுத்திறனுக்கும் உளப்பாங்கிற்கும் கதை வழி இலக்கியம் கற்றல் பெரிதும் துணைப்பிரிகின்றது.








Text Box: மாணவர்களுக்கான கதைகளின் 
வகைகளும் தன்மைகளும்.


6)                                     
      கதைகளின் வகைகள்
*                     பஞ்சதந்திரக் கதைகள்
      எ.கா பிராணிகள், மரம், செடிகள் பேசும் கதைகள்.
*                     மோகினி, வினோதக் கதைகள்.
      எ.கா. அலாவுதினும் அற்புத விளக்கும்.
*                     நாடோடிக்கதைகள்.
      எ.கா. தேசிங்குராசன்.
*                     புராணக்கதைகள்
எ.கா. இராமாயணம், மகாபாரதம்.
*                     வரலாற்றுக் கதைகள்
எ.கா. வீரபாண்டிய கட்டபொம்பு, அங் துவா.
*                     அறிவியல் கதைகள்
எ.கா. விண்வெளி கதைகள்.
*                     விநோதக் கதைகள்
எ.கா. விக்கிரமாதித்தன் கதைகள்.
*                     காப்பியக் கதைகள். எ.கா. சிலப்பதிகாரம், மணிமேகலை
*                     பக்திக் கதைகள்
எ.கா. நாயன்மார் கதைகள்.

கதைகளின் தன்மைகள்
*                  பள்ளி மாணவர்களின் வயது, மனவளர்ச்சி, பட்டறிவு அறிவு
ஆகியவற்றிற்கு ஏற்றனவாக இருத்தல் வேண்டும்.
*                  கதை தெளிவான கருப்பொருளைக் கொண்டிருக்க வேண்டும்.
*                  கதை தலைப்பிற்கும் பாட நோக்கத்திற்கும் ஏற்ப அமைந்துள்ளதை
 உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
*                  கதகளின் செயல்பாடுகளும் நிகழ்ச்சிகளும் மலிந்து,
உரையாடலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
*                  கதை நடை எளிமையாகவும், புரிகின்ற அளவிலும் இருக்க
வேண்டும்.
*                  கதையின் போக்கும், நடையின் தன்மையும் விறுவிறுப்பாக இருக்க
வேண்டும்.
*                  திடுக்கிடும் நிகழ்வுகள், எதிர்பாராத நிகழ்வுகள் மனித பட்டறிவில்
காணாத உண்மைகள் ஆகியவை கதைகளில் இருக்கலாம்.


Text Box: கதைத் தொடர்பான முழு நாள் பாடத்திட்டமும் மதிப்பீடும்7)                          

நாள் பாடத்திட்டம்
 
Rounded Rectangular Callout:               


À¡¼õ       : ¾Á¢ú¦Á¡Æ¢
¬ñΠ    : 2 மல்லிகை
§¿Ãõ       : 8.00 - 9.00 ¸¡¨Ä (1 Á½¢)
¸üÈø §ÀÚ  : 2.10. Å¡º¢ôÒô À̾¢Â¢ø ÅÕõ þ¨½¦Á¡Æ¢, ÀƦÁ¡Æ¢,
                  ÁÃÒò¦¾¡¼÷, ¯Å¨Áò¦¾¡¼÷, þÃð¨¼ì¸¢ÇÅ¢ §À¡ýÈÅüÈ¢ý
                  ¦À¡Õû «È¢Å÷.
¦Á¡Æ¢ò¾¢Èý : 2.12. கதை, உரையாடல், நாடகம் ஆகியவற்றின்
                  கதாபாத்திரங்களின் பண்புகளை விளக்குவர்.

§¿¡ì¸õ    :      þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û:
1.   ´üÚ¨Á§Â ÀÄõ ±Ûõ ÀƦÁ¡Æ¢¨Âô ¦À¡ÕÇÈ¢óÐ ÜÚÅ÷.
2.   ÀƦÁ¡Æ¢ì§¸üÈ ÝÆ¨Ä «¨¼Â¡Çí¸ñÎ ±ØÐÅ÷.
3.   ÀƦÁ¡Æ¢¨Â ¯½÷òÐõ ¸¨¾¨Â ¿ÊòÐì ¸¡ðÎÅ÷.

À¡¼ò¾¨ÄôÒ:     º¢í¸Óõ ±ÕиÙõ
ÀñÒìÜÚ  :      ´üÚ¨Á

ÀÊ /
§¿Ã ´Ð츣Î
À¡¼ô¦À¡Õû
¸üÈø ¸üÀ¢ò¾ø ¿¼ÅÊ쨸¸û
ÌÈ¢ôÒ
À£Ê¨¸
5 (¿¢Á¢டம்)

À¡¸§ÁüÚ ¿Êò¾ø
1.     ¬º¢Ã¢Â÷ ´Õ Á¡½Å¨Ã ÅÌôÀ¢ý Óý «¨ÆòÐ ´Õ Ì¨Âì ¦¸¡ÎòÐ ´Êì¸î ¦º¡øÖ¾ø. À¢ý ´Õ ¸ðÎì Ì¸¨Ç ´Êì¸ô À½¢ò¾ø/
2.     ÁüÈ Á¡½Å÷¸Ç¢¼õ ¾¡í¸û ¸ñ¼ ¦ºö¨¸Â¢Ä¢ÕóÐ «È¢óÐ ¦¸¡ñ¼¨¾ì ÜÈî ¦ºö¾ø.
3.     þ¾ýÅÆ¢ þý¨È À¡¼ò¾¢üÌ þðÎî ¦ºøÖ¾ø.
¸ðÎì Ì¸û

´ôÀ¢Î¾ø
ÀÊ 1
10
¿¢Á¢டம்

படங்கள்
1.     ¬º¢Ã¢Â÷ À¼í¸Ç¢ý Ш½Ô¼ý º¢í¸Óõ ±ÕиÙõ ±Ûõ ¸¨¾¨Âì ÜÚ¾ø.
2.     ¸¨¾Â¢ý ¸Õô¦À¡Õ¨Ç Å¢Çì̾ø.
3.     ¸¨¾Â¢ø ÅÕõ ¸¾¡ôÀ¡ò¾¢Ãí¸Ç¢ý ÀñÒìÜÚ¸¨Ç Å¢Çì̾ø.


ÀÊ 2
15
¿¢Áடம்)


¸¨¾¨Â Å¡º¢ò¾ø

1.     ¬º¢Ã¢Â÷ º¢í¸Óõ ±ÕиÙõ  ±Ûõ ¸¨¾¨Â காணொளியில் காணுதல்: உணருதல்.
2.  «Õ了¡ü¸ÙìÌô¦À¡Õû கூÚ¾ø.
3.  þ츨¾Â¢ø ÅÕõ ÀƦÁ¡Æ¢¨Â
   «¨¼Â¡Çí¸ñÎ ÜÈî ¦ºö¾ø.
4.  ÀƦÁ¡Æ¢Â¢ý ¦À¡Õ¨Ç Å¢Çì̾ø;
   ´üÚ¨Á¢ý «Åº¢Âò¨¾ ÅÄ¢ÔÚòоø.
5.  Á¡½Å÷¸û ÀƦÁ¡Æ¢¨ÂÔõ 
    ¦À¡Õ¨ÇÔõ Å¡º¢ò¾ø.
¸½¢É¢
«ð¨¼
ÀÊ 3
15
நிமிடம்

À¡¸§ÁüÚ ¿Êò¾ø
1.   Á¡½Å÷¸¨Çì ÌØšâ¡¸ì §¸ð¼/ Å¡º¢ò¾ ¸¨¾¨Âô À¡¸§ÁüÚ ¿Êì¸î ¦ºö¾ø.
2.   Á¡½Å÷¸û ´ôÀ£Î ¦ºö¾Ä¢ýÅÆ¢ º¢Èó¾ ÌØÅ¢üÌô À¡Ã¡ðÎò ¦¾Ã¢Å¢ò¾ø.
3.   À¡¸§ÁüÚ ¿Êò¾Ä¢ýÅÆ¢ ÀƦÁ¡Æ¢Â¢ý ¦À¡Õ¨Ç ¯öòн÷¾ø.
´ôÀ¢Î¾ø



ÀÊ 4
   10
நிமிடம்

Á¾¢ôÀ£Î

*Ó¾ø¿¢¨Ä
¦¸¡Îì¸ôÀÀÎõ ÝÆø¸¨Ç Å¡º¢òÐô “´üÚ¨Á§Â ÀÄõ” ±Ûõ ÀƦÁ¡Æ¢ìÌ ²üÈÅü¨Èò §¾÷ó¦¾ÎòÐ ±Øоø.
*þ¨¼¿¢¨Ä
ÀƦÁ¡Æ¢¨ÂÔõ ¦À¡Õ¨ÇÔõ þ¨½ò¾ø.
*¸¨¼¿¢¨Ä
´üÚ¨Á¨Âì ÌÈ¢ìÌõ À¼í¸ÙìÌ (/) ±É «¨¼Â¡ÇÁ¢Î¾ø.


À¢üº¢ò¾¡û

ÓÊ×
5
நிமிடம்

¦¾¡ÌòÐì
ÜÚ¾ø

À¡¼¨Äô À¡Î¾ø


1.   ÀûǢ¢Öõ Å£ðÊÖõ Á¡½Å÷¸û ´üÚ¨Á¡¸ ¦ºÂøÀÎõ º¢Ä §Å¨Ä¸¨Çì ÜÈî ¦ºö¾ø.
2.   ¬º¢Ã¢Â÷ ´üÚ¨Á¢ý «Åº¢Âò¨¾ ÅÄ¢ÔÚòоø.
3.   ´Ä¢ÀÃôÀôÀÎõ À¡¼¨Ä þ¨½óÐ À¡Ê þý¨È À¡¼ò¨¾ ¿¢¨È× ¦ºö¾ø.

´ýÚÀð¼¡ø ¯ñÎ Å¡ú×’




















Text Box: மேலே கொடுக்கப்பட்டுள்ள இலக்கியத்திற்கு ஏற்புடைய பல்வகையான பயிற்சிகளின் குறிப்புகள்.8)
                                                                 

இரண்டாம் ஆண்டு
     þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û:
1.   ´üÚ¨Á§Â ÀÄõ ±Ûõ ÀƦÁ¡Æ¢¨Âô ¦À¡ÕÇÈ¢óÐ ÜÚÅ÷.
2.   ÀƦÁ¡Æ¢ì§¸üÈ ÝÆ¨Ä «¨¼Â¡Çí¸ñÎ ±ØÐÅ÷.
3.   ÀƦÁ¡Æ¢¨Â ¯½÷òÐõ ¸¨¾¨Â ¿ÊòÐì ¸¡ðÎÅ÷.
               *            மாணவர்கள் மணிலா அட்டையில் எழுதிய பழமொழி  சொற்களை ஒட்டுதல்.
               *            மாணவர்கள் சொற்களை பார்த்து வாசித்தல்.
               *            சொற்களின் பொருளை உணரும் வண்ணம் கலந்துரையாடுதல்.
               *            ஒற்றுமை சொற்களுக்கு ஏற்புடைய படங்களை காட்டுதல்.
               *            ஒற்றுமை தொடர்பான கதைகளை காணொளியில் பார்த்துணர்தல்.
               *            பலம்  சொற்களுக்கு ஏற்புடைய படங்களை காட்டுதல்.
               *            பலம் தொடர்பான கதைகளை காணொளியில் பார்த்துணர்தல்
               *            ஒற்றுமையே பலம் எனும் பழமொழியை கதைகளின் வழி உணர்த்துதல்.
               *            ஒற்றுமையே பலம் எனும் பழமொழியை உணர்த்தும் கதையை நிறைவு செய்தல். (கதையை கொடுத்தல்.)
               *            கதையை நடித்து காட்டுதல்.
               *            பழமொழியின் பொருளை எழுதுதல்.
               *            பழமொழிக்கு ஏற்புடைய வாசிப்பு வாய்மொழி பயிற்சிகள்.
               *            பழமொழியைப் பார்த்து எழுதுதல்.
               *            பழமொழியை உரக்க வாசித்து மனனம் செய்தல்.












Text Box: தமிழ் மொழி இலக்கியப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் அவசியமும் பயன்பாடும்.9)
          

Radial Diagram


Organization Chart


Text Box: மேற்கோள் நூல், தகவல் / மூலம் / பின் இணைப்பு11)                                 





2 comments:

  1. சிறப்பான கருத்தும் தொகுப்பும்.

    ReplyDelete
  2. சிறப்பான கருத்தும் தொகுப்பும்.

    ReplyDelete